போதை மாத்திரை ஊசி வைத்திருந்த ஒருவர் கைது

போதை மாத்திரை ஊசி வைத்திருந்த ஒருவர் கைது

கைது செய்யப்பட்டவர்

திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது, திண்டிவனம் வண்டிமேடு உழவர் சந்தை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, திண்டிவனம் NGO காலனி பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் யுவராஜ்(24) என்பவரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா, 98 - 100mg, 10 - 50mg போதை மாத்திரைகள் மற்றும் ஊசி இருந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து யுவராஜ் கைது செய்தனர்.

Tags

Next Story