உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது!

உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது!

கோவையில் உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டான்.


கோவையில் உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டான்.
கோவை:போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க கோவை மாவட்ட போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுக்கரை பகுதியில் உயர்ரக போதை பொருளான METHAMPHETAMINE விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல்துறையினர் மச்சகவுண்டன் பாளையம் சென்று சோதனை மேற்கொண்ட போது உயர்ரக போதை பொருளான METHAMPHETAMINE வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவாகர் (22 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள போதை பொருளான விற்பனையில் ஈடுபட்ட மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்தனர்.பின்னர் குற்றவாளி திவாகரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story