ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
இளைஞர் பலியான சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேலு மகன் லட்சுமணன் (45), இவரது மனைவி கோகிலா. இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் ஏரி, குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்வது, கூலி வேலைக்கு செல்வது என பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், லட்சுமணன் வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில், 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை உள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலத்திடம் தெரிவித்தனர். உடனே அவர், ஆட்களுடன் ஏரியில் நீந்திச் சென்று நீண்ட நேரம் தேடிப் பார்த்த போது, லட்சுமணன் இறந்த நிலையில், குளத்தில் உடல் கிடந்துள்ளது. இதையடுத்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறைக்கு வெங்கடாசலம் தகவல் அளித்தார். பின்னர் அவர்கள் லட்சுமணனின் உடலை மீட்டி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story