திருப்பத்தூர் அருகே காவு வாங்க காத்திருக்கும் பள்ளம்

திருப்பத்தூர் அருகே சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழுந்து படுகாயம் அடைந்து வரும் அவலநிலையில் உள்ளது.

திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளியிலிருந்து அம்பேத்கர் நகர், அங்கநாதவலசை,மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களுக்கு செல்லும் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வரை அந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் சீர் செய்யகோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். இதுவரரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூர்ரசாட்டு வைக்கின்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்

Tags

Next Story