குமரபாளையத்தில் பொதுமக்களை அலறவிட்டு தாழ்வாக வட்டமடித்த விமானம்

குமரபாளையத்தில் பொதுமக்களை அலறவிட்டு தாழ்வாக வட்டமடித்த  விமானம்

வட்டம் அடித்த விமானம்

குமாரபாளையத்தில் 10 நிமிடம் பொதுமக்களை அலறவிட்டு தாழ்வாக பறந்து வட்டமடித்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நேற்று இரவு 09:45 மணி முதல் சுமார் 10 நிமிடமாக, சிறிய ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக, பயங்கர சத்தத்துடன் பறந்ததுடன் வட்டமடித்த நிலையில் செயல்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள போலீசார், ஓட்டல்களில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள், பல வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் என பலரும் சாலைக்கு வந்து வேடிக்கை பார்த்தனர். கீழே விழுந்து விடும் நிலையில் இருந்ததால், மிகவும் அச்சத்துக்கு ஆளாகினர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை செய்து, இனி இது போல் நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story