விஷமருந்திய காதல் ஜோடி பலி !

விஷமருந்திய காதல் ஜோடி பலி !

பலி

காதல் ஜோடிகள் விஷம் அருத்தி தற்கொலை - போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியை சேர்ந்த ப்ளஸ் 2 முடித்த, 17 வயது சிறுமியும், கும்பகோணம் அருகே ஏராகரம் மூப்பக்கோயிலைச் சேர்ந்த அஜய்,22, என்பவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் திருச்சியில் கடந்த மார்ச் 25ம் தேதி திருமணம் செய்து கொண்டு, அங்கேயே தங்கினர். பிறகு, இருவரும் தங்களது வீட்டுக்குச் சென்றால், பெற்றோர்கள் பிரித்து விடுவர் என்பதால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி இருவரும் கடந்த ஏப்.1ம் தேதி தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து, எலி பேஸ்டை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். பிறகு இருவரும் தங்களது பெற்றோர்களிடம் போன் மூலம், எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டதாக ஏப்.2ம் தேதி கூறிவிட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

மேல்சிகிச்சைக்காக இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அஜய் நேற்றுமுன்தினம் இரவும், சிறுமி நேற்று காலையும் உயிரிழந்தனர். இது குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story