வேதாரண்யத்தில் போலீஸ் அதிரடி சோதனை !

வேதாரண்யத்தில் போலீஸ் அதிரடி சோதனை !

பான்மசாலா, குட்கா

வேதாரண்யத்தில் போலீஸ் அதிரடி சோதனை ரூ.2500 மதிப்பிலான பான்மசாலா, குட்கா பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வேதாரண்யம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலவடம்போக்கி தெரு பகுதியில் உதவி ஆய்வாளர் கேத்தரின் எஸ்தர் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனைகள் தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனை செய்த வேதாரணம் கீழத்தெருவை சேர்ந்த முத்து மகன்குணசேகரன்(64) என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா, பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ருபாய் 2500/- ஆகும். இது போன்ற தடைசெய்யப்பட்ட போதை புகையிலைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என்ன நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story