மேல்மலையனூர் அருகே வேன் மோதி காவலர் பலி

மேல்மலையனூர் அருகே வேன் மோதி காவலர் பலி

பலியான காவலர்

மேல்மலையனூர் அருகே வேன் மோதி காவலர் பலியானர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோவில் புறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் சந்தோஷ்குமார்(30). திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் தனது நண்பரான கிளாக்குப்பம் கன்னி யப்பன் மகன் முருகையன் (33) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு அவர்கள் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ்குமார் ஓட்டினார். கோவில்புறையூர் அருகில் சென்றபோது, பின்னால் வந்த வேன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 2 பேரும் படுகாயடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

முருகைய்யனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story