போராட்டத்திற்கு ஆதரவளித்து பெரம்பலூரில் சுவரொட்டி ஒட்டப்பட்டது

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நடத்துகின்ற முதல்வர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவளித்து பெரம்பலூரில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நடத்துகின்ற முதல்வர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவளித்து பெரம்பலூரில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309-ன் படி தமிழக முதல்வர் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக் கோரியும், சி.பி.எஸ். திட்டத்தில் இறந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க கோரியும். இதனை வழியத்தி பிப்ரவரி 16ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் அறப்போராட்டத்திற்கு பெரம்பலூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் ஆதரவு அளிக்கும் வகையில், பெரம்பலூர், 4 ரோடு, துறை சுவரொட்டிகள் ஒட்டி ஆதரவு திரட்டினர். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பழனிவேல் ராஜா, மாவட்ட துணை தலைவர் தாமஸ் விக்டர், மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம், மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story