ட்யூப் லைட் துண்டுகளால் உடலை காயப்படுத்தி கொண்ட சிறை கைதி.

ட்யூப் லைட் துண்டுகளால் உடலை காயப்படுத்தி கொண்ட  சிறை கைதி.

காவல் நிலையம் 

கோவை மத்திய சிறையில் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ட்யூப் லைட் துண்டுகளால் தனது உடலை காயப்படுத்தி கொண்ட சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: எண்ணூரை சேர்ந்த தனசேகரன் (41) போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார்.நேற்று மதியம் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்த வேண்டும் என கூறி சிறையில் இருந்த ட்யூப் லைட் விளக்குகளை உடைத்து தனசேகரன் மார்பு மற்றும் கழுத்து பகுதிகளை கீறி கொண்டதுடன் சிறை வார்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஜெயிலர் ஜெயிலர் சிவராசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது,மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story