தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி!

தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி!

பலி

குடிபோதையில் இருந்த ஓட்டுனரை சரமாரிய தாக்கிய பொதுமக்கள்.
கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திபுரத்தில் மாநகர பேருந்து நிலையம்,பிற மாவட்டங்களுக்கு செல்லும் மத்திய பேருந்து நிலையம்,அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது.மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இன்று பணிகளுக்கு செல்வதற்காக ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் காந்திபுரம்-காந்திபார்க் இடையே இயக்கப்படும் 7ம் எண்ணிட்ட ஸ்ரீ மீனாட்சி என்ற தனியார் பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது.இந்த பேருந்தை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ஒட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் இயக்கி உள்ளார். கவனக்குறைவாக திடீரென பேருந்தை பின்னோக்கி நகரத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் இருந்த பேருந்தை தாண்டிச்செல்ல முயன்ற ஒருவர் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஆகியோர் திருநாவுக்கரசை கீழே இறக்கி விசாரித்துள்ளனர்.அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததால் அவரை சராமரியாக தாக்கினர்.அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து காட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்து நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று பேருந்திற்காக நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story