நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த சுவரில் மோதிய தனியார் பேருந்து

நெல்லையில்  கட்டுப்பாட்டை இழந்த சுவரில் மோதிய தனியார் பேருந்து
காவல் ஆணையர் அலுவலகம்
நெல்லையில் இரவில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து தனியார் பேருந்து நகரத்திற்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது.இந்த பேருந்து ஈரடுக்கு மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரின் மீது மோதியது.

இதில், பேருந்தின் முன் பாகம் சேதமடைந்தது.எனினும் பயணிகள் காயமின்றி தப்பினர்.இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story