கருத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கருத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மாணவி
கருத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து வகுப்புகளை புறகணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் மற்றும் உஷா தம்பதியினரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தவர் கல்லூரி மாணவி பவித்ரா.

இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரி தேர்வில் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஒரு சில பாடங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மாணவி பவித்ரா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று காலை தன்னுடன் தங்கியுள்ள சக மாணவிகளிடம் கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறி விடுப்பு விண்ணப்பத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.

மாணவி பவித்ரா அனுமதி பெறாமல் விடுப்பு விண்ணத்தை அனுப்பியது குறித்து விடுதி காப்பாளரிடம் கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் மாணவி பவித்ராவின் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதிக்காப்பாளர் கல்லூரி நிர்வாகம் மூலம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் மாணவி பவித்ராவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகத்தினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.மாணவி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story