ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளி பேருந்து நெல் வயலில் கவிழ்ந்து விபத்து உள்ளானது.
பேயனூர் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து நெல் வயலில் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பேயனூர் கிராமத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் வித்யா விகாஸ் என்ற தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றி சென்ற D 6 என்ற தனியார் பள்ளி வாகனம் பேயனூர் பகுதியில் இருந்து கோவிந்தாபுரம் நோக்கி சென்று சென்றிருந்த பொழுது எதிர்பாரத விதமாக நெல் வயலில் கவிழ்ந்தது இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர் அருகில் இருந்த பொதுமக்கள் உள்ளே சிக்கி இருந்த மாணவர்களை கண்ணாடி உடைத்து மீட்டனர் சம்பவப் பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story