கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம்

கிறிஸ்துமஸ் ஊர்வலம் 

சேலம் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். செயலாளர் விமல், ஒருங்கிணைப்பாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், சூசன் மகாலில் முடிவடைந்தது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தபடி பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிறிஸ்து பிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் நடனம், நாடகம், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு விருந்து வழங்கப்பட்டது.

Tags

Next Story