பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி

சோழவந்தானில் பாஜக சார்பில் உங்கள் ஆலோசனை என்ற தலைப்பில் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தானில் பிஜேபி. கட்சியினர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சியில் திமுக தொண்டரால் சலசலப்பு. மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்டபிள்ளையார் கோவில் அருகில் பிஜேபி கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி. தலைமையில்.தேனி பாராளுமன்ற பொறுப்பாளர் ரவிபாலா முன்னிலையில் உங்கள் ஆலோசனை எங்கள் தீர்மானம் என்ற தலைப்பில் அட்டை பெட்டி வைத்து கோரிக்கை மனுக்களை தொகுதி மக்களிடம் பெறும் நிகழ்ச்சி நடந்தது.இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வரும் விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்க பாதுகாப்பு கிடங்கு அமைக்க வேண்டும். இப்பகுதியில் நவவோதயா பள்ளி அமைக்க வேண்டூம்.

சத்தையாறு அணைக்கு பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். பறித்த வெற்றிலைகளை பாதுகாக்க குளிர் சாதன கிடங்கு. அலங்காநல்லூர் சக்கரை ஆலையை மீண்டூம் இயக்க வேண்டூம். விவசாயிளுக்கு வழங்கப்பட்டு வருடம் ஆறு ஆயிரத்தை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பிஜேபி கட்சியின் தேர்தல் அறிக்கை பெட்டியில் போட்டனர். இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் கதிர்வேல் அழகர்சாமி. முத்துபாண்டி இருளப்பன் சேதுராமன். மாவட்ட நிர்வாகி ரவிசங்கர்.மகளிர் அணி வசந்தி. முருகேஷ்வரி. செல்வி மற்றும் தசரதசக்கரவர்த்தி பெத்தனபாண்டி..பாலகுரு.உள்ளிட்ட ஏராளமானோர். கலந்து கொண்டனர்..இக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த சப்பாணி கோவில் பாஸ்கரன் என்பவர் கழத்தில் கருப்பு சிவப்பு மப்ளர் துண்டு அணிந்து கொண்டு தண்ணீர் கேட்டு மனு கொடுத்தார் அப்போது மனு பெறும் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags

Next Story