ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி!

ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி!

A program of providing water and buttermilk to the public was held at Arani

ஆரணியில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தினமும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து இன்று ஆரணி அண்ணா சிலை மற்றும் பழைய பேருந்துநிலையம் அருகே பொதுமக்களுக்கு நீர்,மோர், ரோஸ்மில்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர் அன்பழகன், ஆரணி நகர மன்ற தலைவர் மணி, தட்சிணாமூரத்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story