காணை வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

காணை வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த காணை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் இலவச தென்னங்கன்று மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி காணையில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நடை பெற்றது. இதற்கு உதவி இயக்குனர் ஆனந்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சரவணன் வரவேற்றார். காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கி கலைஞ ரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவ சாயிகள் 300 பேருக்கு இலவச தென்னங்கன்றுகள் மற்றும் ஸ்பிரேயர்களை வழங்கினார், நிகழ்ச்சியில் காணை ஒன்றியத்தை சேர்ந்த கல்பட்டு, கோழிப்பட்டு, வெங்கந்தூர், அன்னியூர், ஏழுசெம்பொன், சூரப்பட்டு, கல் யாணம் பூண்டி, சங்கீதமங்கலம், நங்காத்தூர், வெள்ளையாம்பட்டு ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த 300 விவசாயிகளுக்கு 6 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிவண்ணன், பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story