முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திமுகவின் வடக்கு மாவட்டம் சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல் வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தமிழகத்தில் நிதிநிலை என்பது திமுக அரசாங்கத்தில் பணம் இல்லை எனவும் கடந்த ஆட்சியாளர் கள் தமிழக கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என குற்றம்சாட்டிய அமைச்சர் இருப்பதை வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக இன்று அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார். இன்னும் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர இருக்கிறார் என்றார். மேலும் பேசிய அமைச்சர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி வரவில்லை என குற்றம் சாட்டிய கே.கே எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் இதற்கு எல்லாம் மத்திய அரசு எனவும் மத்திய அரசை மாற்ற வேண்டும் என்றார். மத்தியில் மோடி இல்லாத ஒரு ஆட்சி வர வேண்டும் என்றால் அதற்கு இந்திய கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்றார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் மற்றும் விருதுநகர் நகர மன்ற தலைவர் மற்றும் விருதுநகர் யூனியன் சேர்மன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story