வாழைப் பழ காமெடியை வைத்து ஆ.ராசா ஊட்டியில் பிரசாரம் !

வாழைப் பழ காமெடியை வைத்து ஆ.ராசா ஊட்டியில் பிரசாரம் !

வாக்கு சேகரிப்ப்பு


campaign

செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடியை நினைவுபடுத்திய ஆ. ராசா.
ஒரு ரூபாய்க்கு 2 வாழைப் பழம் வாங்கி வர சொன்ன கவுண்டமணியிடம், ஒரு பழம் மட்டும் கொடுக்கும் செந்தில், மற்றொரு பழம் எங்கே எனும்போது, அதுதான் இது என்று சொல்லும் காமெடி பட்டிதொட்டி முழுவதும் பிரபலமானது. இந்த காமெடியை மேற்கோள் காட்டி ஆ.ராசா எம்பி மஞ்சூரில் பேசுகையில், " இந்தியாவில் மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால் மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதி என்று இரண்டு நிதி உள்ளது. தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மாநில பேரிடர் நிதி மட்டுமே வழங்கப்பட்டது. மாநில பேரிடர் நிதி மாநில அரசிடம் வரியாக பெற்ற தொகையிலிருந்து வழங்கப்பட்டது, எனவே தேசிய பேரிடர் நிதி தமிழகத்திற்கு எப்போது வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கேட்டேன், அவர் கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி போல், அந்த நிதி தான் இது என்று மத்திய நிதி அமைச்சர் பதிலளித்தார்,"என்றார்.

Tags

Next Story