ஆ.ராசா உதவியாளர் மனைவி மறைவு: அருண்நேரு எம்பி அஞ்சலி

ஆ.ராசா உதவியாளர் மனைவி மறைவு: அருண்நேரு எம்பி அஞ்சலி

அஞ்சலி செலுத்திய எம்பி

ஆ.ராசா உதவியாளரில் மனைவி இறந்ததை அடுத்து அருண்நேரு எம்பி அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம், கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., அவர்களின் நேர்முக உதவியாளர், ராஜாசிதம்பரம் மனைவி திருமதி ரா.சௌந்திரம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செளந்திரம் உடலுக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன்,

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story