திருச்சியில் ஆ.ராசா எம்.பி. உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு

திருச்சியில் ஆ.ராசா எம்.பி. உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ. உ.சி சிலை முன்பு நிறுவனத் தலைவர் ஆர்.வி.ஹரி ஹரன் பிள்ளை தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆ.ராசாவின் உருவப்படம் திடீரென எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஹரிஹரன் உள்பட நூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Tags

Next Story