சிறுமியை கட்டாய திருமணம் செய்த உறவினர் போக்ஸோவில் கைது

ஊத்தங்கரையில் 13 வயது சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம் செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 13 வயதான இளம் பெண்ணை கட்டாய திருமணம் செய்த உறவுக்கார வாலிபரான 49 வயதான பால்பாண்டி என்பவர் மீது கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த பால்பாண்டியை ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story