இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க கோரிக்கை

இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க கோரிக்கை

உத்தனப்பள்ளியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி செல்லும் இளைஞர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


உத்தனப்பள்ளியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி செல்லும் இளைஞர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள உத்தனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடும் இளைஞர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணமல் செல்வதும் இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் திருடி செல்வது தொடக்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் உத்தனப்பள்ளியில் உள்ள முக்கிய சாலையில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிற்கும் இருசக்கர வாகனத்தை வாலிபர் ஒருவர் சைடு லாக்கரை உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் போதே இருசக்கர வாகனத்தை வாலிபர் திருடி செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை வைத்து இதுபோல் இருசக்கர வாகனங்களை தொடர்ச்சியாக தேடி வரும் இளைஞர்களை பிடிக்க வேண்டும் என உத்தனப்பள்ளி போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story