அச்சிறுபாக்கம் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

அச்சிறுபாக்கம் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ரேஷன் கடை
பழுதடைந்த நிலையில் இருக்கும் அச்சிறுபாக்கம் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி 12வது வார்டில், காந்தி நகர், மலை நகர் உள்ளடக்கிய பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நியாய விலைக் கட்டடம் சேதம் அடைந்து, மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 2013 --- 14ல், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்புற சுவர் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், பழைய நியாய விலை கடையை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டடம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story