குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

கடையநல்லூரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியிலுள்ள கருப்பாநதி அணை நிரம்பி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட பல ஆயிரம் கன அடி நீரால் குடியிருப்புகளில் நீா் புகுந்ததுடன், குடிநீா் ஆதாரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடையநல்லூா் நகராட்சியில் உள்ளூா் நீா்வள ஆதாரம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மழை வெள்ளத்தின் காரணமாக உள்ளூா் மற்றும் தாமிரவருணி குடிநீா்த் திட்ட ஆதாரங்களின் மூலம் குடிநீா் விநியோகிக்க காலதாமதம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, பொதுமக்கள் நகராட்சி விநியோகிக்கும் குடிநீரை வீணடிக்காமல் காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story