கிரேன் மீது கார் மோதியதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

கிரேன் மீது கார் மோதியதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிரேன் மீது கார் மோதியதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிரேன் மீது கார் மோதியதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பூக்கடை வைரவன் மகன் கணேசன் (42) மற்றும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (45) ஆகிய இருவரும் காரில் அறந்தாங்கி சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாலை கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்தனர். காரைகணேசன் ஓட்டினார்.

கார் கீரமங்கலம் அருகே வடக்கு வீரராகவமணி குளக்கரை அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கிரேன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். கணேசன் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கீரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story