இளம் வாக்காளர்களுக்கு பரிவட்டம் கட்டிய வருவாய் அலுவலர்

தர்மபுரியில் முதல் முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார்பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதயில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர், வாக்களிப் பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் தருமபுரியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன் முறையாக வாக்களிக்க வந்திருந்த இளம் வாக்காளரை வரவேற்று பரிவட்டம் கட்டி வரவேற்பு மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார், முதல் வாக்காளருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு வழங்கி உள்ள இந்த சம்பவம் தருமபுரியில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பத குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story