ஆத்தூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

ஆத்தூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
தஞ்சமடைந்த காதல் ஜோடி 
ஆத்தூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமம் சூரக்காட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் சுபாஷ் ஸ்ரீ (வயது 19). இவரும், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் விஜய் (26) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி நேற்று திருமணம் செய்து கொண்டனர். ஆத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் இருவரின் பெற்றோரையும் அழைத்துச் சமாதானம் செய்து அங்கிருந்து காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story