சிவகாசி அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்

சிவகாசி அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்

தற்கொலை செய்து கொண்டவர்கள்

சிவகாசி அருகே கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தற்கொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பழனியம்மாள் இவர் சுக்கிவார்பட்டி பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் லிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகிய யாரும் வீட்டை விட்டு நீண்ட நேரம் வெளியே வராத காரணத்தினால் அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்ததில் லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் குழந்தைகள் ஆனந்தவள்ளி, ஆதித்யா ,

சசிகா(2 மாத குழந்தை) ஆகிய ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்ததாகவும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ஐந்து பேரும் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து பேர் தற்கொலை காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாத குழந்தை உட்பட உயிரிழந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story