சேலையில் தூரி கட்டி விளையாடிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் !

அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் சேலையில் தூரி கட்டி விளையாடும் போது கழுத்து இறுகி, பள்ளி மாணவன் உயிரிழப்பு.
பள்ளப்பட்டியில்,சேலையில் தூரி கட்டி விளையாடும் போது கழுத்து இறுகி, பள்ளி மாணவன் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, பள்ளப்பட்டி, குப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த சபையர் மகன் முகமது அப்தாப் வயது 13. இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 2-ம் தேதி காலை 8:30- மணி அளவில் சிறுவன் அப்தாப், வீட்டிற்குள் சேலையில் தூரி கட்டி விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக சேலை சிறுவன் அப்தாப் கழுத்தை இறுக்கி உள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் அறிந்த சிறுவனின் தாயார் சுமையா வயது 32 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த பள்ளி மாணவன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story