கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

விசாரணை

கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, இடையபட்டி கிராமத்தில் உள்ள முத்துப்பட்டி சீலம நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் பெரியசாமி வயது 12. இவர் கடவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மார்ச் 21ஆம் தேதி காலை 11 மணியளவில், கடவூர் வடக்கு தெருவில் உள்ள ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் மாணவன் பெரியசாமி. கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பெரியசாமியின் தந்தை பழனிச்சாமி, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றுள் இறங்கி உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Next Story