பண்ணந்தூர் அருகே பள்ளி மாணவன் மீது டிராக்டர் மோதி பலி

பண்ணந்தூர் அருகே பள்ளி மாணவன் மீது டிராக்டர் மோதி பலி

பலியான மாணவன்

பண்ணந்தூர் அருகே நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது தண்ணீர் டிராக்டர் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன்-மலர்விழி என்பவரது மகன் கணபதி இவர் பண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது முழு ஆண்டு பொது தேர்வு எழுதி வரும் நிலையில் தேர்வு எழுதிவிட்டு கணபதி அவரது வகுப்பு நண்பனுடன் அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது சாணான்கொல்லை பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்த தண்ணீர் டிராக்டர் ஒன்று மாணவன் மீது பலமாக மோதியதில் மாணவன் தூக்கி வீசப்பட்டார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் கணபதி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார. இது குறித்து அவரது தாய் மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாரூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story