பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பற்றி எரிந்த பள்ளி வண 

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேனில் இருந்த மாணவர்கள் எந்த பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் (ஜெயவாசவி) இருந்து 44 மாணவர்கள் பள்ளி முடித்துவிட்டு பள்ளி வேன் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, பள்ளி வேன் சுண்ணாம்புபள்ளம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது, இதனை தொடர்ந்து பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் பள்ளி மாணவர்களை வேனில் இருந்து உடனடியாக வெளியேற்றியதால் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர், பின்னர் இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், அதற்குள் தீ முழுவதும் பரவி பள்ளி வேன் முற்றிலும் எரிந்து நாசமாகியது, மேலும் பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகிய நிலையில், இத்தீவிபத்து குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் பள்ளி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Next Story