சங்ககிரி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

சங்ககிரி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

விபத்துக்குள்ளான பேருந்து

சங்ககிரி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக சென்ற தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு... ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் செயல்பட்ட வரும் மங்களம் என்ற தனியார் பள்ளி வாகனம் சித்தார் பகுதியிலிருந்து ஓட்டுநர் ஜாம்ஜோஜிவா என்பவர் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இலந்த பள்ளி வேன் ஏரிக்கரையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஜாம்ஜோஜிவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் பள்ளி வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தேவர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சங்ககிரி அருகே காலையிலே பள்ளி வாகனம் ஏரிக்கரை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள், பொதுமக்களிடையே இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story