மரக்காணம் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவி பலி

மரக்காணம் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவி பலி

விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது

மரக்காணம் அருகே கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவி. விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடநெற்குணம் மேட்டு தெருவை சேர்ந்த ராஜி மகள் பவதாரணி வயது 12. இவர் ஆலங்குப்பம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய அதே கிராமத்தை சேர்ந்த தனசேகர் என்பவர் மகன் தங்கராசு என்கிற பிரசாந்த் வயது 27 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story