மேல்மலையனூர் அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவி பலி

மேல்மலையனூர் அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவி பலி

கோப்பு படம் 

மேல்மலையனூர் அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவி பலியானர்.

மேல்மலையனூா் வட்டம், கண்டமநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் கோப்பெருந்தேவி(15). இவா், கெங்கபுரம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், கோப்பெருந்தேவி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிா்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த வளத்தி போலீசார் நிகழ்விடம் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story