காண்ட்ராக்டருக்கு அரிவாள் வெட்டு  - 2 பேர் தலைமறைவு

காண்ட்ராக்டருக்கு அரிவாள் வெட்டு  - 2 பேர் தலைமறைவு
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பகுதியில் முன்விரோதத்தால் காண்ட்ராக்டரை அரிவாளால் வெட்டியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வடசேரி பகுதியில் வசிப்பவர் முருகன் என்பவர் மகன் பால்பாண்டி (24). நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலை செய்து வருகிறார். இவருடன் களக்காடு பகுதி சேர்ந்த அக்பர் (32), சுடலைமணி (38 ) ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பால்பாண்டி ரூ 100 கமிஷன் எடுத்துக் கொள்வது வழக்கம். இதனால் பால்பாண்டிக்கு இவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 11 மணியளவில் வடசேரி, மேல கலுங்கடி சந்திப்பில் வைத்து இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அக்பர், சுடலைமணி ஆகியோர் சேர்ந்து பால்பாண்டியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இது குறித்து பால்பாண்டியின் அண்ணன் கருப்பசாமி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பபோலீசார் வழக்கு பதிவு செய்து அக்பர், சுடலைமணியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story