வேலை வாங்கி தருவதாக கூறிய பாடகர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறிய பாடகர் கைது

கைது செய்யப்பட்ட பிச்சைகண்ணுவுடன் போலீசார்

நெல்லை டவுனை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு, இன்னிசை குழுவில் பாடகராக உள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு பாட்டு பாட சென்ற போது அப்பகுதியில் உள்ளவர்களிடம் தான் ரயில்வேயில் வேலை பார்த்து வருவதாகவும், பல்வேறு அதிகாரிகளை தனக்கு தெரியும் என்பதால் பணம் கொடுத்தால் எளிதாக தன்னால் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பலரின் புகாரின் அடிப்படையில் தென்காசி சைபர் கிரைம் போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story