தாளவாடி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை யானை

தாளவாடி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை யானை

சாலையில் யானை நடமாட்டம் 

தாளவாடி அருகே வனப்பகுதியையொட்டி உள்ள ரோட்டில் யானை நடமாடுவதால் இரு சக்கர வாகன ஒட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனப்பகுதியையொட்டி உள்ள ரோட்டில் யானை நடமாடுவதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி , மான், சிறுத்தை, கரடி யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனச் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நெய்த்தாலபுரம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரோட்டில் யானை நாடமாட்டம் இருந்தது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் வரிசையாக நின்றன. சிறது நேரத்திற்கு பின் யானை வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் செல்போன்களில் விடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த இடத்தில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாடி வருவதால் இருசக்கர வாகன ஒட்டிகள் பீதியடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story