வாகனங்களை வழி மறித்த ஒற்றைக்காட்டு யானையால் பரபரப்பு

வாகனங்களை வழி மறித்த ஒற்றைக்காட்டு யானையால் பரபரப்பு

காட்டு யானை

கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் வாகனங்களை வழி மறித்த ஒற்றைக்காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் அடிக்கடி யானைகள் சாலை கடப்பதும், வழி மறிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் பந்தலூர் செல்லக்கூடிய எலியாஸ் கடை பகுதியில் திடீரென ஒற்றைக் காட்டு யானை சாலை நடுவே வந்து நின்றுள்ளது. இதனால் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்பு வாகனங்கள் சென்றன.

Tags

Next Story