ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - கிராம மக்கள் அச்சம்

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - கிராம மக்கள் அச்சம்

காட்டு யானை

கோபிசெட்டிபாளையம் பங்களாப்புதூர் அடுத்த பெருமுகை பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை குளத்துக்காடு பகுதி கிராமத்திற்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.என் பாளையம் வனத்துறையினர் யானையை மீண்டும் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story