பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி CITU சார்பில் பிப் 16ம் தேதி மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி CITU சார்பில் பிப் 16ம் தேதி மறியல் போராட்டம்

மறியல் போராட்டம்

அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும் சிஐடியு மாவட்ட செயலாளர் தகவல்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் இருந்து , சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டு தெரிவித்துள்ள தகவலில், கார்ப்பரேட்டுகள் கொள்ளையை தடுத்திட வேண்டும், விவசாயம் பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை தொழில்களை பாதுகாத்திட வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும், MSP சட்டபூர்வமாகிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை தடுத்திட வேண்டும், மின்சாரம் தனியார் மையமாவது தடுக்க வேண்டும், பாசிசத்தை, ஜனநாயகத்தை முறியடித்திட, வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெற உள்ளது, இதனை வலியுறுத்தி பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும்வேலை நிறுத்தம் மறியல் போராட்டம், குறித்த பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும், இந்த வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்க வேண்டும், மேலும் இதற்கு வணிகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story