சிவன்மலை கோவில் படிக்கட்டில் படியேறிய  பாம்பு

சிவன்மலை கோவில் படிக்கட்டில் படியேறிய  பாம்பு
பச்சை பாம்பு
சிவன்மலை கோவில் படிக்கட்டில்  படியேறிய பச்சை பாம்பு பார்த்து பக்தர்கள் அச்சபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலையில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக விளங்கி வருவது சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இக்கோவிலில் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் அறநிலைத்துறை கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. தினசரி பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த மலையில் அறியவகை தாவரங்கள், மரங்கள் மற்றும் சிறு சிறு உயிரினங்களான பல்லி, பாம்பு, உடும்பு, கீரி மற்றும் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைக் கோவில் படிக்கட்டில் ஏராளமான பக்தர்கள் படியேறி கொண்டிருந்த நிலையில் இவர்களுடன் சுமார் 5 அடி நீளம் கொண்ட பச்சை பாம்பும் படியேறி சென்றது. இதை கண்ட பக்தர்கள் பயந்து கொண்டு நகர்ந்து .இதனை அடுத்து இந்த பாம்பு படிக்கட்டில் இருந்து திசை மாறி மலைகளில் உள்ள செடி கொடிகளுக்குள் சென்றுவிட்டது. இதனை படம்பிடித்து சிலர் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags

Next Story