பள்ளிபாளையம் அருகே வீட்டினுள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்பு

பள்ளிபாளையம் அருகே வீட்டினுள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்பு

உயிருடன் மீட்கப்பட்ட பாம்பு

பள்ளிபாளையம் அருகே வீட்டினுள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ரங்கனூர் நால்ரோடு பகுதி அருகே கோவிந்தராஜ் என்பவர் வீட்டினில், பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 6 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பை பத்திரமாக மீட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.

தற்போது வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்குவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறை வீரர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

Tags

Next Story