திருக்கோவிலூரில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்

திருக்கோவிலூரில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்

முகாமில் பங்கேற்றவர்கள்

திருக்கோவிலூரில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருக்கோவிலுார் அடுத்த வடக்கு நெமிலி கிராமத்தில் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து தீவனம் வழங்கும் முகாம் நடந்தது. காட்டுப்பையூர் கால்நடை மருத்துவமனை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் திருக்கோவிலுார் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் முரளி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பிரபு துவக்க உரையாற்றினார். திருக்கோவிலுார் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் விவசாயிகளிடம் கால்நடைகளுக்கான தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்துக்களை வழங்கினார்.

Tags

Next Story