விருதுநகரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

விருதுநகரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவசதையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான மனுக்களை தேவையான ஆவணங்களுடன் (ஆதார் அட்டைநகல், குடும்பஅட்டைநகல், புகைப்படம், வங்கிகணக்கு புத்தகம்) இணைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரம் பெறுவதற்கு மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலக தொலைபேசிஎண்: 04562-252068-யை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story