மழை வேண்டி பால ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை

மழை வேண்டி பால ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை

சந்தன காப்பு அலங்காரம்

சேலம் மாவட்டம், சங்ககிரி மழை வேண்டி பால ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட சூரியன் மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளூற்றுப்பெருமாள் கோவில் முன்பு உள்ள பால ஆஞ்சநேயருக்கு சித்திரை மூன்றாவது சனிக்கிழமையை யொட்டி அதிகாலை முதலே ஆஞ்சநேயருக்கு பால்,தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் விவசாயம் செழிக்க சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு பால ஆஞ்சநேயர் சுவாமியை வழிபாடு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story