பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு ஈசன் மற்றும் நந்தி பெருமானுக்கு பால்,தயிர், சந்தனம்,மற்றும் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஈசன் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்வில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர் பூஜைகளை கௌரி சங்க சிவாச்சாரியார் மற்றும் பிரசாந்த் சிவாச்சாரியார் செய்து வைத்தனர்.

Tags

Next Story