சிவன் கோயிலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

சிவன் கோயிலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு

வழிபாடு நடத்திய தேமுதிகவினர் 

கீழ்பென்னாத்தூர் சிவன் கோயிலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தே.மு. தி.க செயலாளர் எஸ். சங்கர் தலைமையில்,நகர செயலாளர் சி. ரமேஷ்,ஒன்றிய அவைத்தலைவர் டி.செந்தில், பொருளாளர்- மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி கீழ்பென்னாத்தூர் சிவன் கோயிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கும்,அம்மன் சன்னதியில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை,வழிபாடும் அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

இதில், ஒன்றிய துணை செயலாளர்கள் ரமேஷ்,ரங்கராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், பழனி, இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், தொண்டரணி செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட நிர்வாகி எம்.கே.குமார் மற்றும் நகர நிர்வாகிகள்,ஊராட்சி செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story